Saturday, May 15, 2010

பிம்பம்














இனம் புரியாத

சந்தோசம்

ஓர் துள்ளல்!

என்னவென்று அறிந்து

கொள்ளும்முன்

பிடித்துக் கொள்ளும்

அறியாமலே

ஆகாயத்தில் பறப்போம்.

திடீரென விடைபெறும்

சோகம்

இருளில் ஆழ்த்தும்!

மகிழ்ச்சி, சோகம்

மெய்ப்பாடு எதுவெனினும்

முதலில் தனிமையிடம்

பகிர்வு!

தனிமையில் பிடித்தம்

நீர்த்து போகும்!

சில தருனங்களில்

கேள்விகள் எழும் !

கேள்விகள் எப்போதும்

கேள்விகளாகவே இருக்கும்

பல வேலைகளில்

ஈடுபட்டாலும்

மனம்

பதிலை தேடும்!

மனம் மறுத்தாலும்

பதில் என்னவோ

வெறுமையில்

நிற்கும்.
'Tamilish'

No comments:

Post a Comment